75 வது சுதந்திர தினம் : ஒற்றுமைத் தேரிழுப்போம்

நலம்விரும்பிக்கு

!
––—————–
விலையிலா உயிர்த்தி யாகம்
செய்தவர் நம்முன் னோர்கள்,
கலைபோல் ஊட்டி அன்று
வளர்த்தனரே சுதந்தி ரத்தை!
மலைப்போல் எழுந்து போரில்
தன்னுயிர் தன்னை ஈந்து
தலையாய தேசத் தாயின்
நலம்காத்தத் தியாகி கள்தான்!

அலைகின்ற காற்றைப் போல
சுதந்திரமாய் நாமும் வாழ
வலைவிரித்த பிரிஷ்டி ஷாரின்
லத்தியடிப் பரிசைப் பெற்று
விலகாத தேசப் பக்தி
யினைவுயிர் மூச்சாய்க் கொண்டு
சலைக்காத உள்ளப் பற்றால்
விடுதலை பெற்றிட் டாரே!

வளையாத வானம் போல்
தளராத குணம் ஒன்றால்
திளைக்கின்ற இந்த நாளை
நமக்களித்த பெரியோர் பாதம்
விளைகின்ற பூவால் தொட்டு
வணங்குவோம்! பூமி போல
திளைக்கின்ற மதியால் நாமும்
ஒற்றுமைத் தேரி ழுப்போம்!

சினோஜ்

15-8-22
1;25-PM

sinojmusical #Sinojkavithaikal #sinojarticles

பின்னூட்டமொன்றை இடுக